Sunday, January 31, 2010

கப்சோகண்ட்

சென்ற பதிவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  அது தொடர்பான முழுதகவல்களும் கிடைக்கப்பெற்றவுடன் தெரிவிக்கிறேன்.

இந்த பதிவு ஒரு விளிப்புணர்வுக்காக எழுதுகிறேன்.  இதனைப் பற்றி சிலருக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடியா வாய்ப்பு இருக்கின்றது.  தொலைக்காட்சிகளில் ஒரு பற்பசை விளம்பரத்தில், அம்மா தன்னுடைய மகனை மறைத்து மறைத்துக் கூட்டிக்கொண்டுப் போவார். அப்போது அவரிடம் 'உங்கள் பையன் தேர்வில் தோற்றுபோய்விட்டானா', அதற்கு அந்தம்மா 'என் பையன் தோற்றுப்போகல எங்க பற்பசைதான் தோற்றுவிட்டது' என்று பதில்சொல்வார்கள். 
கப்சோகண்ட் உபயோகப்படுத்துங்க என்று விளம்பரம் முடியும்.

இங்கே விளம்பரத்தினை பற்றி நான் விமர்சனம் செய்யப்போவதில்லை.  நம்ம கப்சோகண்ட பற்றி நான் அனுபவ ரீதியா உணர்ந்த ஒரு விசயத்தினை பகிர இருக்கின்றேன்.  இது நடந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.  அப்போ வீட்டிலே கப்சோகண்ட்தான் பயன்படுத்திகொண்டு இருந்தோம்.  பற்கள் நல்ல பிளிச்சின் பவுடர் போட்டு தேய்ச்ச மாதிரி நல்லா பளிச்சென்று இருக்கும். ஆனால் இரண்டோ அல்லது முன்றோ மாதங்களில் பற்களில் இரத்தக்கசிவு வர ஆரம்பித்தது.  மருத்துவரிடம் சென்ற போது அவர்  மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிட்டார்.  

ஆனால் இரத்தக்கசிவு நிற்கவில்லை.  பற்கள் கூச ஆரம்பித்தது. 
எனக்குமட்டுமல்லாமல் வீட்டில் அம்மாவுக்கும் இதே பிரச்சினை.  பின்பு என் தந்தை எல்லாவற்றிற்கும் காரணம் கப்சோடண்ட் என்று கூறி அதை மாற்றிவிட்டார்.  பின்பு கிக்கோதான் இன்று வரையிலும்.  அதை நிறுத்தி ஒரு வாரத்துக்குள்ளாகவே மாற்றம் தெரிந்தது.  பின்பு முழுவதுமாக நின்று விட்டது.
இதை ஏன் சொல்கின்றேன் என்றால், இங்கு அமீரகத்தில்
கப்சோடெண்ட்டின் குறிப்பிட்ட  பிராண்ட் தடைசெய்யப்பட்டுள்ளது.
அறையில் உள்ளவர்கள் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது என்னுடையஅனுபவத்தையும் கப்சோடெண்டையும் பற்றி கூறினேன். 
பெரும்பாலானோர்  இரத்தக்கசிவு இருப்பதாக கூறினார்கள். 

இதை என் நண்பனிடம் கூறிய பொழுது அவன் 'கிக்கோவா அது ரொம்ப சப்புன்னுல்ல இருக்கும் '  என்றான்.  உங்களுக்கு இந்த அனுபவம் இருந்தால் இங்கே பகிருங்கள்.

No comments:

Post a Comment