Thursday, July 15, 2010

கரிய முகம்

விழுந்த இடத்தில் கல்லாய்
விரிசல் விழுந்த மனமாய்
பறந்து விழுந்த பறவையாய்
சரிந்து போன வாழ்க்கையாய்
நீண்டு கொண்டே போனதடி
நீ இல்லாத இந்த வாழ்க்கை
தொலைத்துவிடவே முயன்றேன்
உன் நினைவுகளை
தொடவே முடியாத தூரத்தில்
தொடர்பே அற்ற இத்தருணத்தில்
மீண்டும் மீண்டும் துரத்துதடி
உன் கரிய முகம்.

கோணல் என்பார்கள்
பின்னால் பேசிச்சிரிப்பார்கள்
முன்னால் போகும் எனக்கோ
முடிவுரை எழுதத்தோன்றும்.

கையை பிடித்து இழுத்து வருவாய்
பின் கண்ணீரால் என் கையை நனைத்து விடுவாய்.
கருமை நிறக் கடவுளுக்கே அழகுமுகத்தின் தேவை இங்கே
கத்திப்பேசி சண்டையிடுவேன்
நீ என் அழகியென்று.

சிரித்து சிரித்துப் பேசும்பொழுது
சிதறி விழும் புன்னகையை
சிந்தவிடாமல் அள்ளிப் பருகிக்கொள்வேன்.
அறிமுகம் செய்ய அழைத்துப்போக
பேரைச்சொல்லும் முன்னே
கோணலாய் போனதடி அகமுகம்.

முகம் காட்ட மறுத்த முகத்தை
முறைத்துவிட்டு வெளியேறினேன்.
அறியேனடி விட்டுப்பிரிவாய் என்று
தேடித்திரிந்தேனடி இலக்கறியாமல்.

தேடிக்களைத்த ஒரு பொழுதில்
சேதி வந்ததடி நீ வந்துவிட்டாய் என்று
ஓடிவந்தேனடி உறைந்து நின்றேனடி
கரியமுகம் காணவில்லையடி.
பின்னே யாரோ பேசும் ஓசைக்கேட்டது
உன் முகத்தை இரயில் தண்டவாளம் எடுத்துக்கொண்டது என்று.

8 comments:

MR.BOO said...

அருமையாக உள்ளது சமீர்.
நாளுக்கு நாள் உங்கள் கற்பனை மெருகேறுகின்றது. வாழ்த்துக்கள்.

Mohan said...

கவிதை நல்லாயிருக்குங்க!

விஜய் said...

கடைசி வரியில் கணக்க வைக்குறீங்க பென்னி,

மிக அருமையானா வரிகளை பிடித்துவந்து
ஒன்றுபடுத்தி மனதை கணக்க வைக்குறீர்கள் ..

எழுத்துக்கள் என்றால் ஏதாவது செய்ய வேண்டும் படிப்பவனை
இதை அழகாய் நிறைவேற்றி இருக்குறீர்கள் ..


வாழ்த்துக்கள் தொடருங்கள் ...

செல்வா said...

ஹய்யோ .. அருமைங்க ..
சத்தியமா கலக்கி இருக்கீங்க ..

ஜீவன்பென்னி said...

நன்றி MR.BOO

நன்றி மோகன். உங்க கவிதைகளும் நல்லாயிருக்கு.

விஜய் எனக்கு ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் இட்டு என்னை எழுதத்தூண்டும் உனக்கு நன்றிகள்

செல்வா இதுக்குக்காரணமே நீதானப்பா.

சௌந்தர் said...

கல்லாய்

மனமாய்

பறவையாய்

வாழ்க்கையாய்

படிக்க படிக்க மிகவும் அருமையா இருந்தது

சௌந்தர் said...

எங்களுக்கு மொக்கை தான் போட்ட தெரியும் இங்கு கவிதை மழை.....

ஜீவன்பென்னி said...

//எங்களுக்கு மொக்கை தான் போட்ட தெரியும் இங்கு கவிதை மழை....//

மொக்கை போடுறது ஒன்னும் ஈசியில்லத்தம்பி அதுவும் ஒரு கலை. அது எனக்கெல்லாம் ரொம்ப கஷ்டம் ஆனா உனக்கு அடிச்சு நவுத்து.

Post a Comment