Saturday, August 07, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?

 தொடர்ப்பதிவிற்கு அழைத்த சவுந்தருக்கு நன்றி. 



1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சமீர் அகமது.



2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

 என் உண்மையான பெயர் சமீர் அகமது. முதலில் வலைப்பதிவின் பெயர் ஜீவன்பென்னி பதிவுகள் என்று இருந்தது. பின்பு பதிவுகள் என்று மாற்றிவிட்டேன்.  ஜீவன்பென்னி என் நண்பனின் புனைப்பெயர் அவன் நினைவாகவே இந்த வலைப்பூவிற்கு இதை வைத்தேன். இது சுந்தரராமசாமியின் ஜெஜே சில குறிப்புகள் நாவலில் வரும் கதாபாத்திரத்தின் பெயர்.




3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

வலைப்பூவின் அறிமுகம் thatstamil.com மூலமாக அறிமுகமானது. ஒரு வருடம் வரையிலும் படித்துக்கொண்டு மட்டுமே இருந்தேன். எனது முதல் வலைப்பூவை  wordpressஸில் சென்ற வருடம் எப்ரல் மாதத்தில் ஆரம்பித்தேன். அதன் பிறகு இரண்டும் மாதம் கழித்து பிளாக்கருக்கு மாறியாகிவிட்டது.



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திரட்டிகளில் இணைப்பதோடு சரி.   இடுக்கையின் தரமே, அதன் பிரபலத்தன்மையை முடிவுசெய்யும். ஆனால் இங்கு நிலைமை வேறு. நான் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த வரையிலும் எனக்குப் பிடிக்கும் பட்சத்தில் ஓட்டும், கருத்துரையும் எழுதியிட்டு வந்தேன். வலைப்பூ ஆரம்பித்த உடன் அது குறைந்துவிட்டது. 


,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விசயங்களை அதிகமா பகிர்ந்ததில்லை. என் கண்ணில் நான் கண்டவை, சொல்லக்கேட்டவை, உணர்ந்தவை இப்படி அனைத்தையும் வைத்தே எழுதுகிறேன். என் சொந்த விசயங்களை வெளிப்படையாக எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரவில்லை என்று நினைக்கின்றேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என் மனநிலையினைப்பொருத்தே என் பதிவுகலும் அதன் வார்த்தைப்போக்கும் அமைகின்றன.  வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியதற்கு காரணம் பொழுது போக்கு பதிவுகள்தான்.  ஆரம்பத்தில் எழுதினேன்.  இப்பொழுது எழுதுவதில்லை.  அதற்குண்டான மனநிலை அமையும் பட்சத்தில் எழுதுவேன்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 பன்னீர்புஷ்பங்கள் என்ற மற்றொன்று உண்டு. அதில் ஒரு பதிவு மட்டுமே எழுதியிருக்கின்றேன்.



8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்? 

அவரவர்க்கு அவரவர் வழி. எனக்கு என் வழி.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எனக்கு முதலில் பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தியவர் கலையரசன். அதன் பிறகு  அமீரக நண்பர்கள்.  ஒரு கட்டத்தில் பதிவுலகின் மீது ஏதோ ஒரு வெறுப்பு தோன்றி எழுதாமல் இருந்த பொழுது மீண்டும் என்னை எழுததத் தூண்டிய பதிவர் தேவா அவர்கள் மற்றும் கழுகுத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

அனைவருக்கு நன்றியும், வணக்கங்களும்.

சவுந்தர் நான் யாரையும் தொடரச்சொல்லப் போவதில்லை. இதை உனக்காக மட்டுமே எழுதினேன்.


11 comments:

Unknown said...

//அவரவர்க்கு அவரவர் வழி. எனக்கு என் வழி.//

சரியான பதில்

சௌந்தர் said...

நன்றி நான் தொடர சொல்லி எழுதியதற்கு எதார்த்தமான பதில்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்...

எல் கே said...

vaalthukkal

விஜய் said...

உங்க பதில்கள் ரொம்ப பிடிச்சு இருக்கு ஜீவன்..வாழ்த்துக்கள் ..தேவா அண்ணாவுக்கும் எனது வாழ்த்துக்கள்

Jey said...

:)

செல்வா said...

ஆஹா .. ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க ..!!

அருண் பிரசாத் said...

ஜீவன்பென்னி பெயர்க்காரணம் டச்சிங்

அது ஒரு கனாக் காலம் said...

keep it up

Prathap Kumar S. said...

:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

:))

சரியான பதில்கள்..

வாழ்த்துக்கள் ..

Maduraimohan said...

நல்ல பதில்கள் :)

Post a Comment