Wednesday, March 31, 2010

அங்காடியும் நானும் - 2

இரவு மணி ஒன்பது கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய

அதிர்ச்சியாக இருந்தது. நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்

சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு

எப்படியிருக்குமென்று.



நேரம் ஆக ஆக கடைக்கு வரும் மக்களின் நிறம் மாறத்தொடங்கியது.  துணிகளின் விலையும் மாறத் தொடங்கியது.  பெரும்பாலனவர்கள் இளைஞர்கள், நாள் முழுவதும் உடல் வருந்த உழைக்கும் மக்கள்.   இதை யாரும் சொல்லாமலே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.எத்தனையோ சினிமாக்களில் 
நாயகன் நாளைய பண்டிகைக்கு அதற்கு முந்தைய நாள் இரவில் தனக்கு கிடைத்த பணத்தில் குழந்தைக்கும், மனைவிக்கும் துணி வாங்கிவிட்டு 
தனக்கென்று ஒன்றும் வாங்காமல் செல்வது போன்ற காட்சிகள் வரும்.  அந்த நிஜத்தினை நேரில் கண்டேன்.  .  காலையிலிருந்து நின்று கொண்டிருப்பதால்
கால்கள் வலிக்கத்தொடங்கியது. வலியினை உணரும் போதெல்லாம்  என் தந்தையின் நினைவும் வந்து சென்றது.  
 பல வருடங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் தந்தைக்கும்,  மற்றவர்களுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்.


மணி இரவு பதினொன்று.  காலகளில் வீக்கம் தெரிந்தது.  முதுகிலும் வலியினை உணர்ந்தேன். என் முன்னே துணிகள் குவிந்து கிடந்தன. கூட்டம் அதிகமானதால்  வருபவர்களை முழுமையாக 
கவனிக்கமுடியவில்லை. சிலர் பொறுமை காத்தனர்,  சிலர் பொறுமை இழந்து தன்னைக் கவனிக்கச் சொல்லிக்கொண்டிருந்தனர்,சிலர் வெளியே சென்றனர்.  எனக்கும் இந்த அனுவம் இருந்திருக்கின்றது.  அது இயல்பு தான் எனினும்,  அங்கே நிற்கும் பொழுதுதான் அது புரிந்தது.


அவருக்கு நாற்பது வயதிருக்கக்கூடும்.
 கிளிசல்களுடன்அழுக்கேரிய சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தார்.
கூட்டத்துடன் நின்றிருந்தாலும்அவரை கவனத்திலேயே வைத்திருந்தேன்.
 பேண்ட்களை எடுப்பதும், விலையினைப்பார்ப்பதும் மீண்டும் வைப்பதும் அதே போன்று சட்டைகளை எடுப்பதும் வைப்பதும்.  அவரை அழைத்தேன்,  என்ன வேண்டும்என்று கேட்டபடியே  உள்ளதிலேயே விலை குறைவான
துணிகளாக எடுத்துக் காட்டினேன்.  அவருக்குப் பிடித்திருந்தாலும் இயலாமை அவர் முகத்தில் தெரிந்தது.    மிகுந்த தயக்கத்துடன் ஒன்றையெடுத்து 100 ரூபாய்க்கு கிடைக்குமா என்று கேட்டார்.  அதன் மேல் 225 ரூபாய்க்கு விலை ஒட்டப்பட்டிருந்தது.  நான் 200 என்று கூறினேன்.  முதலாளியிடம் பேசுங்கள் என்று சொல்லி 175 க்கு ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பினேன்.  அவரும் அதற்கு மேல்
குறைக்கவில்லை.  முகத்தில் நிறைவும், மகிழ்ச்சியும் தெரிந்தாலும் அதையும் தாண்டி ஏக்கமும் தெரிந்தது.  சுருட்டி வைத்திருந்த காகிததிலிருந்து
 ரூபாய்நோட்டுக்களை எடுத்து கொடுத்தார்.  அத்தனையும் பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள்.


இரவு 12 மணியினை தாண்டியிருந்தது.  ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார்.  அந்தப் பையனின் முகம் வாடியிருந்ததைக் கவனித்தேன்.  கேட்டது கிடைக்காத ஏக்கம் தெரிந்தது.  அவர் சாதாரன பேண்ட்களை பார்த்துக்கொண்டிருந்தார்.  அவனது கண்களோ ஜீன்ஸ் பேண்ட்களின் மேல் இருந்தது.  தந்தையும் மகனும் எதிர் எதிர் மன நிலையில்.  அவன் விருப்பத்தினை அவரிடம் கூறினாலும் அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.  அவன் விருப்பத்தினை மீறி அவர் வாங்கிவிட்டார்.  அவர் வாங்கியது அங்கு இருந்த ஜீன்ஸ் பேண்ட்களை விட விலை அதிகமான ஒன்றானாலும் அவனுக்கு பிடிக்காதது.  அவன் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.  அழுகை மட்டும் இல்லை. 


காலை நான்கு மணிக்குமேல் கூட்டம் குறையத்தொடங்கியது.  என் கால்களும் முன்பை விட மிகப் பெரிதாக இருந்தன.
5 மணிக்கு மேல் யாரும் வரவில்லை.  நண்பன்  இருதய பிரச்சினை உடையவன்.    அவனால் நிற்க முடியவில்லை.  உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டான்.   நானும் மற்றொரு நண்பனும் பேசிக்கொண்டிருந்தோம்.   முதலாளி வெளியே சென்றிருந்தார்.  அன்று நான் வாங்கப்போகும் சம்பளம் 500 மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன்.  என்னளவில் மிகக் கஷ்டப்பட்டு சம்பாரித்த இல்லை சம்பாதிக்கப்போகும் என் முதல் சம்பளம்.   ஒரு வாரக்காய்ச்சலில் தளர்ந்திருந்த என் உடல் அன்றைய 500 ரூபாய் என்ற இலக்கை நோக்கி அனைத்தையும் தாங்கிக்கொண்டது. 


காலை 8 மணிக்கு முதலாளி வந்தார்.  நாங்களும் கிளம்புவதற்கு தயாரகயிருந்தோம்.  500 ரூபாய் நோட்டுகளை எண்ணி தனியாக வைத்துவிட்டு 100 ரூபாய் நோட்டுகளை எண்ணி ,  ஒரு 50 தை சேர்த்து மொத்தமாக 1050 தை கொடுத்தார். விற்பனை எதிர்பார்த்த அளிவிற்கு இல்லையென்றும் அதனால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்றும் கூறினார்.  இரவு முழுவதும் மிகுந்த இரைச்சல், ஆராவாரங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த பகுதி வெறிச்சோடிக்கிடந்தது.  எங்களை அழைத்து வந்திருந்த நண்பன் 
பேசிப்பார்த்தான்,  அவருடையபேச்சில் அலட்சியமும்,
 இடத்தை காலி செய் என்ற தொனியும் இருந்தது.  
அவரிடம் வாக்குவாதம் செய்வதற்கோ,  பிரச்சினைகள் செய்வதற்கோ  எங்களிடம் சக்தியில்லை.  வேறு வழியில்லாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு
பேருந்து நிறுத்தத்தினை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.  இன்று வரையிலும் அந்த 350 பது என் மனத்திற்கு 500 ஆகவே தெரிந்தாலும், என்னளவில் முதல் உழைப்பும், அந்த காகித நோட்டுகளும் மதிப்பிட
 முடியாதவையாகவே இருக்கின்றன.


(காலையில் 800 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டி விறகப்பட்ட ஒரு பேண்ட் 
நடு இரவில் பாதிவிலைக்கும் சற்று அதிகமாக விற்கப்பட்டது.)



Tuesday, March 30, 2010

அங்காடியும் நானும்

இது அங்காடித்தெரு படத்தினைப் பற்றியப்பதிவு அல்ல.  ஒரு துணி அங்காடியில் ஒரு நாள் வேலைப்பார்த்த அனுபவம்.  திருச்சியில் தீபாவளியின் போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் துணிக்கடையினில் பகுதி நேர வேலைக்கு போவார்கள்.  என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது வீட்டில் அனுமதி கிடைக்காது என்று மறுத்துவிடுவேன்.

கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த பொழுது நண்பன் அழைத்தான், (என்ன வீட்டில் இருந்த பொழுது?வெட்டியா இருந்த 
பொழுதுன்னு சொல்லு)  வீட்டில் கேட்டபொழுது அனுமதி கிடைத்தது. இருபத்தி நான்கு மணி நேர வேலை, 500 ருபாய் சம்பளம்.  ரமலான் நோன்பு நேரமும் கூட.  சரியாக காலை 9 மணியளவில் கடையில் நுழைந்தோம்.  நாங்கள் மூன்று பேர். எந்த விதமான முன் அனுபவமும் கிடையாது.  கடையின் முதலாளி வட நாட்டுக்காரர்.  வந்தவுடன் எங்களை மேலிருந்து கீழ் வரை அளந்தார்.  என்னைப்பார்த்துவிட்டு நீ வெளியே நின்று கூட்டம் அதிகமாகும் பொழுது வருவோரை கட்டுப்படுத்தவும்,  
வாங்கிச் செல்லும் பொருட்களையும் பில்லையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தினார். 

காலையில் பெரிதாக கூட்டம் இல்லை.  ஒருவர் இருவராக வந்து கொண்டிருந்தனர்.  ஒரு வாரக்காய்ச்சலில் இருந்து மீண்டு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.  நான் நினைத்த அளவிற்கு கடினமாக இல்லை என்று எண்ணிக்கொண்டேன்.  மதியத்திற்கு பின் கூட்டம்
 அதிகமாகிக்கொண்டிருந்தது.  ஒரு கட்டத்தில் உள்ளே ஆள் தேவைப்பட நானும் உள்ளே அழைக்கப்பட்டேன்.  நமது மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள்.  எத்தனை விதமான முகங்கள், ரசனைகள்,விருப்பங்கள்,  சண்டைகள்,கோபங்கள் இன்னும் பல என்று அனைத்தையும் கண்டேன்.  5 வருடங்கள் கடந்த பின்னும் என்னுள் சிரிப்பினை உண்டாக்குகின்றன.  அந்த சுவாரசியங்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.  வருபவர்கள் அதை இதை என்று அனைத்தையும் எடுத்துப்போட சொல்ல ஒவ்வொன்றாக எடுத்து போடுவதும் பின்பு மடித்து எடுத்து வைப்பதும்,  சிறிது நேரத்தில் சலித்துப்போனது. 

பொருட்களுக்கு விலை சொல்வதில்தான் திறமையே இருக்கின்றது.
 இன்று வரையிலும் நான் அங்கு விலை சொல்லி விற்றப்பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவில்லை.  பேண்ட் வகை துணிகள் தரத்தினைப்பொருத்து விலை வேறுபடும்.  இது அனைத்து வகைக்கும் பொருந்தும் என்றாலும்,  அன்று நான் அதை விற்ற விதம் இன்று வரையிலும் புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. அதை இறுதியில் சொல்கிறேன். 

நாளை தீபாவளி. மாலை 6 மணி ,  கூட்டம் சமாளிக்கக்கூடிய அளவிலேயே இருந்தது.  என் நண்பன் கூட்டம் நிறைய இருக்கும் சமாளிக்க முடியாது என்று சொல்லியிருந்தான்.  நோன்பு திறப்பதற்காக 20 நிமிடங்கள் முடப்பட்டது.  வெளியே கூட்டம் முண்டியடித்து கொண்டிருந்தது.  விட்டால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுவது போல் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள்.  நான் கதவைத்திறந்து வெளியே சென்று கூட்டத்தை சமாளிக்க முயன்று தோற்றுப்போனேன்.
 

நல்ல உயரம், கையில் மஞ்சள் பை, கருத்த மேனி  பார்த்தவுடனே சொல்லிவிடலாம் கிராமத்தான் என்று.  கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு என்னிடம் வந்து சேர்ந்தார். 
அந்த பச்ச கலரு,  இந்த நீல கலரு,  அது எவ்வளோ, இது எவ்வளோ என்று  நிறைய பார்த்துவிட்டு வேண்டாம் என்று போய்விட்டார்.  ஒரு அறைமணி நேரத்தில் மீண்டும் வந்து மீண்டும் அதே மாதிரி, 
கேட்ட அனைத்தையும் எடுத்துப் போட்டாகிவிட்டது.  ஒன்றும் வாங்கவில்லை.


இப்பொழுது  எனக்கு கோபம் வந்தது. ஆனால் என்னை   நானே
சமாதானப்படுத்திக்கொண்டேன்  இந்த வேலையில் இதெல்லம் சகசம் என்று.  அறைமணி  நேர இடைவெளியில்  மீண்டும் வந்தார்.  இப்பொழுது
எண்ணிடம் இல்லை  என் நண்பனிடம், சட்டைகள் பிரிவில். ஒன்றும்
வாங்கவில்லை.  ஆனால் கையில்  மற்றொரு கடையின் பையிருந்தது.
எனக்கு  விளங்கிவிட்டது.  மீண்டும் அதே  ஆள்,  முதலாளியிடம்
கண்ணை காட்டிவிட்டேன்.   அவரை நுழைவு வாயிலிலேயே தடுத்து
உள்ளே நுழைய விடாமல்  திருப்பி அனுப்பிவிட்டார்.

இரவு மணி ஒன்பது  கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்
சாரை  சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு எப்படியிருக்குமென்று. 

தொடரும்.

Sunday, March 21, 2010

(18+) விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்

இளகிய மனதுடையவர்கள் பார்க்கவேண்டாம்.



இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.

ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

மற்றபடி

வாழ்க (வல்லரசு) இந்தியா...

http://pathipakkam.blogspot.com/2009/11/blog-post.html

Saturday, March 20, 2010

இது நம்ம ஆளு-3

நம்மாளு பஸ்ல ஏற்றதுக்காக நின்னுக்கிட்டு இருந்தாரு.  கூட்டமோ கூட்டம் செம கூட்டம், லைன் கட்டி நிக்குது. மொத பஸ்ஸு, இரண்டாம் பஸ்ஸுன்னு வரிசையா மூனு பஸ்ஸு போயிடுச்சு, அப்படியும் நம்மாளுக்கு முன்னாடி இருவது பேரு நிக்குறாக.  யப்பானு ஒரு பெருமூச்ச விட்டாறு.  அடுத்த பஸ்ஸு வர்றதுக்கு எப்படியும் இன்னும் அரைமணி நேரம் ஆகும்போல, என்ன செய்யுறது(மனசுக்குள்ள).  வெளிய சொன்னாலும் யாருக்கும் புரியப்போறது இல்ல.
சுத்தித் தமிழ் தெரியாதவுகலா இருந்தா எப்புடி புரியும்.  இப்போ மலையாளிகள மனசுக்குள்ள திட்டுனாறு.  வந்தவுக ஒழுங்க மலையாளத்த பேசியிருக்க வேண்டியதுதான எதுக்கு இந்திய பேசுனாங்க.  இப்போ பாரு எல்லா அரபியும் இந்திய பேசுறாங்க.  நமக்கு தெரியலன்னு சொன்னா,  நீ இந்தியாதானேன்னு சந்தேகமா கேக்குறாங்க.  

பஸ்ஸு ஒன்னு வந்து நின்னுச்சு. முன்னாடி நம்பரையே காணோம்,
எங்க போகுதுண்ணும் தெரியல.  நம்மாளு நமக்குத்தான் தெரியலையோன்னு கண்ண சுருக்கி கைய நெத்தில வச்சு பாக்குறாரு அப்பயும் ஒன்னும் தெரியல.  எல்லாத்தையும் எறக்கிவிட்டுட்டு அது கிளம்பிடுச்சு.  பின்னாலயே அடுத்த பஸ்ஸு,  வரிசையில இருக்குறவுக எல்லாம் பறக்குறதுக்கு ரெடியாகுற மாதிரி பஸ்ஸுல ஏர்றது ரெடியானாங்க.  நம்மாளும் ரெடியானாரு.  ஒவ்வொருத்தரா ஏற ஏற நம்மாளு வரிசைல முன்னாடி போனாரு. 

டிக்கெட்ட வாங்குறதுக்காக பாக்கெட்லருந்து பர்ஸ எடுத்து மெஷின் மேல வைக்க டிக்கட் வெளிய வந்துச்சு. நம்மாளுக்கு ஒரே ஆச்சரியம்,
இத்தனை நாளா இது தெரியாம போச்சேன்னு. நம்மாளும் டிக்கெட் மெஷின்ல தன்னோட பர்ஸ வைக்க டிக்கெட் வரல.  வச்சு வச்சு எடுக்குறாரு.  ஒன்னும் நடக்கல.  டிரைவரு அண்ணாச்சி பர்ஸ வாங்கி வச்சு பாத்தாரு.  அப்பயும் வரல.  மெஷின்தான் கோலாரு பண்ணுதுன்னு அத கலட்டிப்பாத்தாரு.  டிக்கட் பேப்பரையும் மாத்துனாரு.  எல்லாத்தையும் செட் பண்ணி மீண்டும் வச்சா ஹுஹும் நோ டிக்கட்.  பின்னாடி நின்னவுக இரண்டு பேரு தன்னோட பர்ஸ வைக்க இப்போ டிக்கெட் வந்துச்சு.  இப்போ மறுபடியும் நம்மாளு தன்னோட பர்ஸ வைக்க டிக்கெட் வரல. 

பிலிப்பினி அண்ணாச்சி அதங்க நம்ம டிரைவரு பர்ஸ வாங்குனாரு, பிரிச்சுப்பாத்துட்டு நம்மாளுக்கு புரியாத பாசைல திட்டிப்புட்டு,  காசு இருக்கான்னு கேக்க நம்மாளு ஒன்னும் புரியாம முளிக்க அதப்பாத்த சேட்டன் ஒருத்தரு வந்து என்னனு கேக்க, பஸ்ஸே சிரிக்குது நம்மாளப்பாத்து.  அப்புறம் ஒரு வழியா காச கொடுத்து டிக்கெட்ட வாங்கி உள்ள போய் உக்காந்தாரு.  பின்னாடியே வந்த சேட்டன் எப்படியா இப்படிங்குற மாதிரி ஒரு பார்வைய பாக்க நம்மாளு சீரியஸ்ஸா அதுக்கு வெளக்கம் சொன்னாரு.  இது(பர்ஸ்ல பஸ் கார்டு இல்லாம டிக்கெட் எடுக்குறது) புது சிஸ்டம் போலன்னு நினைச்சுட்டேன்.

Tuesday, March 09, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

இந்த விண்ணைதாண்டி வருவாயா விடாது கருப்புங்குற கதையா என்ன சுத்தி சுத்தி அடிக்குது. என் வேலைய முடிச்சுட்டு ரூமுக்கு திரும்பிக்கிட்டிருந்தேன், பாசக்கார பயபுள்ள ஒருத்தன் கால் பண்ணி விண்ணைதாண்டனும் கூட வாடான்னா. ஒரு தடவ தாண்டுனதுக்கே எனக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு, மறுபடியுமான்னு யோசுச்சேன்.

மனசு கிடந்துக்கிட்டு போ போ போயி எஞ்சாய் பண்ணுன்னு பாடம் எடுத்துச்சு. அன்னைக்கு புடிச்ச பைத்தியம் தெளிஞ்சு இப்போதான் நார்மலாயிருக்கு.


இந்த படத்துல அப்புடி என்னதான் ஸ்பெஷல்னு பார்த்தா கதை ரீதியாவோ, இல்ல படமாக்கிய விதத்துலயோ புதுசா ஏதும் இல்ல. ஆனா ஒரு FEEL இருந்துச்சு. என்னதாண்டா உன்னோட பீலிங்கு? ரொம்ப பிலிம் காட்டுறன்னு யோசிக்குறீங்களா. அதுகெல்லாம் அனுபவம் வேணும். உங்களுடைய முதல் காதல் அது உண்மையான காதலா(உண்மையான காதல்னா என்னங்க?) இருந்து அது நிறைவேறாமல் போயிருந்தா நான் சொல்லுற அந்த FEEL கிடைக்கும். (இந்த FEEL எனக்கு வரலங்க, நம்ம பிரண்டு FEELல பத்தி என்கிட்ட சொல்ல அத இங்க எழுதிட்டேன்..எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.)


3சா!!! இந்தப் பொண்ணுக்கு யாராச்சும் நடிக்க சொல்லித்தந்தா பரவாயில்ல. ரொம்ப கொடுமைடா சாமி. எல்லாத்துகும் முஞ்ச சுரிக்கிக்கிட்டு/சுளிச்சுக்கிட்டு/உதட ஊன்னு வச்சுக்கிட்டு ஒரு எக்ஸ்பிரசனக் காட்டுது. சிர்க்கிறத விட்டா அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்.  சிலம்பரசன் நடிச்ச படத்த தியேட்டர்ல பார்த்ததே ஒரு புதுமைதான். நம்பி வந்த என்ன ஏண்டா வந்தன்னு என்னைய நானே கேட்டுக்காத அளவுக்கு நல்ல முன்னேற்றம். ரொம்பவே அடக்கி வாசிக்க வச்சிருக்காரு டிரைக்டரு.

காதலன்,காதலி,காதல் இவங்க முனு பேருமே முக்கால்வாசி படத்த ஆக்கிரமிச்சுட்டாங்க. காக்க காக்க காமேரா மேன் கணேஷ். செம வாய்ஸ், என்னோட clap's அவருக்கு. இந்த படத்தோட தயரிப்பாளர்கள்ல ஒருத்தரு போல. நார்மலாவே அவர் அப்புடித்தான் பேசுராறு. டைட்டில்ல ஆரம்பிச்சு எண்டு டைட்டில் வரைக்கும் ஏஆர் அந்த FEELல Maintain பண்ணியிருக்குறார். கேமேராமேன் பரமஹம்சா.(லென்சுக்கு நேரா வேளிச்சம் படக்கூடாது, படம் புடிக்குறப்போ) எப்பவோ யாரோ எனக்கு சொல்லி இன்னைக்கும் வரைக்கும் போட்டோ புடிக்குறப்போ பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். கண்களை உறுத்தாத படப்பிடிப்பு. படத்துல ஒரே ஒரு தேவையில்லாத செம பில்டப் காமெடி சண்டை. சாதரணமான கதைல டிபரண்டானா கிளைமாக்ஸ், இரைச்சல் இல்லாத இசை, கண்களுக்கு குளிர்ச்சியான கேரளம், பில்டப் இல்லாத ஹீரோன்னு  செய்சுட்டாரு டிரைக்டரு கவுதம்.


படம் முடிஞ்சு வெளிய வர்ரப்போ நண்பன் பெருசா ஒரு பெருமூச்சு விட்டான். என்னான்னு கேட்டேன். மச்சான் என் வாழ்க்கைலயும் "இரண்டு TRUE LOVE !!!!" இருக்குதுன்னு சொன்னான்.

Tuesday, March 02, 2010

இது கொஞ்சம் புதுசா இருக்கு

பன்னீர்புஷ்பங்கள்
எனக்கு புடிச்சிருந்தது நீங்ககளும் படிச்சுப்பாருங்க