Monday, December 20, 2010

முதல் கிறுக்கல்

சிறகொடிந்த பறவையொன்று
வீழ்ந்துகொண்டிருந்தது
கீழ்நோக்கி....
அதன் சிறகுகளோ
பறந்துகொண்டிருந்தன
மேல் நோக்கி....


முதன் முதலில் டைரி எழுத ஆரம்பித்த பொழுது கவிதை என்று  நினைத்துகொண்டு எழுதிய முதல் வார்த்தைகள்.

Sunday, December 19, 2010

ஒற்றை மழைத்துளி

தொடரும் பயணங்களில்
வழிந்தோடிக்கொண்டிருக்கின்றது
என்னுள் நிறைந்திருக்கும்
உன் சாரல் மழை.

நினைவுகளை நின்று விட்ட மழையின்
ஒற்றைத் துளி அடித்துச் செல்ல
சோ வென்ற மழை மொழி புதிதாய்
நிரம்பத்தொடங்குகின்றது.

காயத் தொடங்கும் முற்றத்து வாசலில்
குறுக்கும் நெடுக்குமாய்  நேர்கோட்டில் 
அணி சேரத்தொடங்கினர்
என் அழைய விருந்தாளிகள்.

மழைமேகங்கள் விலகிச்செல்ல
ஒற்றைத்துளியாய் சுழ் எங்கும்
பசுமை போர்த்திக்கொண்டு
பறவையின் சிலும்பல்களில்
சிந்திக்கொண்டிருந்தது என்னின்
ஒற்றை மழைத்துளி.