Tuesday, December 22, 2009

Hunter இது விமர்சனம் அல்ல

இது விமர்சனம் இல்ல.

வேட்டைக்காரன் படத்தினைப்பற்றி வரக்கூடிய விமர்சனங்கள படிச்சுட்டு ரொம்ப நல்ல காமெடி படம் போலன்னு நினைச்சுக்கிட்டு நேத்து டிக்கெட் கிடைக்காததால இனனிக்கு காட்சிக்கு நேத்தே டிக்கெட்ட வாங்கிகிட்டு வந்துட்டோம்.

உண்மைய சொல்லனும்னா இது தான் எனக்கு முதல் அனுபவம். என்னன்னா விஜய் நடிச்ச(மன்னிக்கனும்) ஒரு படத்த முதல் முறையா தியேட்டர்ல பார்த்தேன். 

கும்பல் இருக்காதுன்னு நினைச்சிக்கிட்டு போனா டிக்கெட்டே இல்லங்குறானுங்க.  இன்னைக்கும் முதல்ல ரெண்டு வரிசை மட்டும் நிரம்பாம இருந்துச்சு.

ரஜினிய பத்தி இப்புடித்தான் சொல்லுவாங்களாம்.  எப்புடின்னு கேக்காதீங்க தெரிஞ்சவங்க யார்கிட்டயாச்சும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.  அதே கதைதான் விஜய் படங்களுக்கும் நடக்குதோன்னு எனக்கு தோணுது.
சரியில்ல சரியில்லன்னு சொல்லிகிட்டே முக்காவாசிப்பேரு படத்த பார்த்துர்ராங்கங்குறதுதான் உண்மை.

விஜய் நடிச்ச படம் 100 நாள் ஓடுதாங்குறது முக்கியமில்ல.  ஆனா அவரு படம் முதலுக்கும் லாபத்துக்கும் மோசமில்லங்குறது மட்டும் உண்மை.

"என் உச்சி மண்டைல" ன்னு ஆரம்பிக்குற அந்த பாட்டுல ஒரு மாறுவேடப் போட்டியே நடத்தியிருந்தாரு.  அத பத்தி என்னன்னு சொல்ல.  ஆனா ஒரு விசயம் எனக்கு புரிஞ்சுது, அவரு இப்புடியே நடிக்குறது அவருக்கும் பாக்குறவங்களும் நல்லது.

இன்னொரு முக்கியமான காட்சி மலை அருவிலேர்ந்து கிழ குதிச்சு தப்பிக்குற காட்சி,   குதிக்குறப்போ நின்னுகிட்டே நீச்சலடிக்கப்போறாருன்னு தெரியும் ஆனா குதிச்சு தண்ணிகுள்ள இருந்து வெளிய வர்ற காட்சி எப்பா!!! அத காண கண் கோடி வேணும்.  அர்னால்டே(Predetor) தோத்து போய்டுவாரு.  அங்கதான் இயக்குனரோட திறமைய பாத்தேன்.

நண்பர்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்குறது,
நண்பன் இறந்து போறது இன்னும் நெறய வழக்கமான விசயங்கள்.
அவைகள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னுமில்ல.

விஜயோட அக்கா சாரி ஜோடி அனுஷ்கா. இந்த அறிமுகமே போதும் கதாநாயகிக்கு.  மனோபாலா சிரிக்க வைக்கிறாரு.  வில்லன்கள பத்தி என்னன்னு சொல்ல.  வர்றாங்க அடிவாங்குறாங்க, பறந்து பறந்து விழுறாங்க.

கடைசியில வில்லனுக்கு வணக்கம் சொல்லுறப்போ விஜய் என்னமா எக்ஸ்பிரசன் காட்டுறாரு. 

வேட்டைக்காரன் எம்ஜியார் நடிச்ச படம்.  அந்த படமும் இந்த படத்துக்கு எந்த விதத்துலயும் குறஞ்சது இல்ல.

Friday, December 11, 2009

க்ரைம் கதை- இறுதி பாகம்

இழு இழு நல்லா இழுடா...

ம்ம்ம்ம்ம் நல்லா இழு...

இவ்வளோடதாண்டா என்னால முடியும்.

சரி சரி.. இழு இழு...

வந்துடுச்சு வந்துடுச்சு இன்னும் கொஞ்சம் தான்.

போதும் விடு விடு கொஞ்சம் பிளேடு போட்டா வந்த்துடும்.

டொர் டொர் கிர் கிர்
கொர் கொர் டொர் டொர்

அப்பாடா வந்துடுச்சு.

கட்டுனதுதான் கட்டுனானுங்க சின்னதா கட்டக்கூடாது எவ்வளோ நீளம்
இதுக்கு இடையில கம்பிங்க வேற இதுனால எவ்வளோ கஷ்டம்.  இந்தப்பக்கட்லேர்ந்து அந்தப்பக்கம் போறதுக்கு அறை மணி நேரமாகுச்சு, இனிமே பிரச்சனையில்ல. காலைல அறை ம்ணி நேரம் லேட்டாவே எழுந்திரிக்கலாம் ஆபீஸ்லயும் எவனும் ஏண்டா லேட்னு கேக்கமுடியாது.

கத இங்க முடியுது.



க்ரைம் கதைன்னு போட்டிருந்துச்சு கதை அதுக்குள்ள முடிஞ்சுடுச்சு கேக்காதீங்க இன்னொரு முறை தலைப்ப நல்லா படிங்க.




இதுல இருக்குற ஒரு கம்பியத்தான் நம்ம கதைல அறுத்தாங்க.

Tuesday, December 08, 2009

க்ரைம் கதை-பாகம் 2

டொர்.... டொர்..... கிர் கிர்
டொர்.... டொர்..... கிர் கிர்

டேய் மெதுவாடா சத்தம் அதிகமா வருது பாரு.

இதுக்கும் மேல மெதுவ அறுக்க முடியாதுடா.  இப்புடி அறுத்தாலே இன்னைக்குள்ள முடிக்க முடியுமான்னு தெரியல. 

பாத்துக்கிட்டே இருடா எவனாச்சும் வராணான்னு.

ஆனா ஒன்னுடா இத மட்டும் நாம செஞ்சு முடிச்சுட்டோம் பல பிரச்சனைங்க தீர்ந்திடும்ல.  நிம்மதியான தூக்கம், டென்சன் இல்ல.
எவனும் ஏன்னு கேட்கமுடியாது.

ஒரு கம்பிய எடுத்தா போதுமா இல்ல ரெண்டு கம்பிய தூக்கனுமா.
 நீ கொஞ்சம் பாத்து சொல்லு. 

ஒரு கம்பியே போதும்டா.  நானும் நீயும் என்ன இரண்டு அடி அகலமா இருக்கோம்.
 
வேலையப்பாருடா கேள்விகேட்டுகிட்டு,  நாளைக்கு எப்புடி ஆபிஸ்க்கு போகப்போறன்னே தெரியல.  இப்பவே மணி 2.30 ஆச்சு.

டேய் டேய் நிப்பாட்டுடா சைரன் சத்தம் கேக்குது.

 ஓடு ஓடு அந்த மரத்துக்குப் பின்னால ஓடு.  ஆ..............ஆ.....................................

டேய் என்னடா ஆச்சு,  உன் முட்டியில சிவப்பா என்னமே வருது.  என்னடா அது.

நக்கலு,  பேசுடா பேசு.  இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.  உனக்கு உதவி பண்ண வந்தேன் பாரு என்ன சொல்லனும்.


சைரன் சத்தம் கிட்டக்க கேக்குதுடா நல்லா மறஞ்சிக்கோ.  எவன் கண்ணுலயாச்சும் மாட்டிக்கிற போறோம். அப்புறம் கம்பிதான்.


உய்ய் உய்ய் உய்ய்
உய்ய் உய்ய் உய்ய்
உய்ய் ஊய்ய் உய்ய்

டேய் இது ஆம்புலன்ஸ் வண்டியோட சத்தம் மாதிரியே இருக்குல்ல.

ஆம்புலன்ஸ் வண்டி மாதிரியே இல்ல ஆம்புலன்ஸ் வண்டியேதான்.

அடச்ச.................. 

இத கேட்டு ஓடி கால்ல ரத்தம் வந்ததுதான் மிச்சம்.

சரி சரி சீக்கிறம் ஆரம்பி டைம் ஆகிக்கிட்டே இருக்கு.

மணி 3.00

டொர்.... டொர்..... கிர் கிர்


டொர்.... டொர்..... கிர் கிர்

மணி 3.30

டொர்.... டொர்..... கிர் கிர்


டொர்.... டொர்..... கிர் கிர்

மணி 3.55

போதும்டா நாளைக்கு கண்டினியு பண்ணலாம்.

என்னது நாளைக்கா இன்னும் ஒரு அறை மணி நேரந்தான், எல்லாம் முடிஞ்சுடும்.  வெய்ட் பண்ணு.


தொடரும்...

Monday, December 07, 2009

க்ரைம் கதை-பாகம் 1

டேய் இன்னைக்கு எப்புடி ஓகே வா?  முடிச்சுடலாமா!
ரொம்ப கஷ்டமா இருக்குது என்ன சொல்லுற.

இன்னைக்கு ஓகே தான். ஒரு நாள்ல முடியும்கிற.

 ஆரம்பிச்சுடுவோம். முடியுறது நம்ம கைல இல்ல. 
அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்,  மாட்டிகிட்டோம்னா
 கம்பி எண்ணவேண்டி இருக்கும் நியாபகத்துல வச்சுக்கோ.

இப்போ மணி என்னா ஆகுது?

பத்து மணியாக பத்து நிமிசம் இருக்குடா.

இந்த ஊர் காரணுங்க அவ்வளோ சீக்கிரத்துல தூங்கமாட்டாங்களே.  இப்போ அங்க சன நடமாட்டமும் அதிகமா இருக்கும்.  ஒரு பண்ணிரெண்டு மணி வாக்குல கிளம்புவோம் என்ன சரியா. 

டேய் நாளைக்கு நான் வேளைக்கு போகனும்டா,  12 மணிங்குற.  ஒனக்கு லீவு, நீ தூங்குவ 12 மணி வரைக்கும்.  நமக்கு தாங்காதுப்பா. 

இப்படியே தள்ளிப்போட்டுகிட்டே போனா பின்னாடி ரொம்ப கஷ்டம்டா.  இத என்ன நாம மட்டும் தனியாவா செய்யப்போறோம், அவனுங்களும் தான வர்றேன்னு சொல்லியிருக்கானுங்க.  இது ஒரு கூட்டு முயற்ச்சிடா.  நீ சும்மா வந்து வேடிக்கைய மட்டும் பாரு.  மத்தத நான் பாத்துக்குறேன்.

உன்னோட வேலை போலிசு வந்தா சிக்னல் குடுக்குறதுதான்.  போறதுக்கு முன்னாடி சாமனெல்லாம் எடுத்து தயாரா வை. நா ஒரு தம்ம போட்டுட்டு வரேன்.


சாமான எடுத்துவச்சுட்டியா.  எதையும் மறந்துடாத.

ஆமா பெரிய இந்த சாமா.  ஆக்சா பிளேடும், ஒரு கத்தியும் இதுக்கு ஏண்டா இவ்வளோ பில்டப்பு.

எல்லா விசியத்துலயும் ப்ரொபசனலா இருக்கனும்ல அதுக்குத்தான்.

ஓகே கிளம்பலாம். மணி பதினொன்னு ஆச்சு,  இப்போ கிளம்புனோம்னா அங்க போய் சேர்றதுக்கு சரியா இருக்கும்.

கதவ பூட்டிட்டியா?  நல்லா பூட்டுடா, நாம போன நேரம் பார்த்து உள்ள புகுந்து லவட்டிட போறானுங்க. 

இருக்குறது இரண்டு கட்டிலும்,  கந்தலா ரெண்டு டிரஸும் அத எடுக்குற தைரியம் எவனுக்கும் வராது, கவலப்படாத.


இரவு 11.45:


எங்கடா அவனுங்களும் வருவானுங்கன்னு சொன்ன.  ஒருத்தனையும் காணோம்.  மணி 12 ஆகப்போகுது.  இதுக்குத்தான் முன்னாடியே போன் பன்னி கன்பார்ம் பண்ணிக்கனுங்குறது.

அவனுங்க வரமாட்டானுங்க.

ஏண்டா?

அவனுங்க வரோம்னு சொல்லவேயில்லயே.  அப்புறம் எப்புடி வருவானுங்க.

டேய் என்னா விளயாடுறயா?  நான் கிளம்புறேன்.

டேய் போய்டாதடா இன்னைக்கு ஒரு நாள் தான்.  இன்னைக்கு இத முடிச்சுட்டோம்னா வாழ்நாள் முழுக்க பிரச்சனையே இல்லடா.  ப்ளீஸ்.

சரி செஞ்சுத்தொலையுறன்.

இன்னும் ஒரு ஒரு மணிநேரம் போச்சுன்னா இந்த ஏரியாவுல ஆள் நடமாட்டம் குறஞ்சிடும் அப்புறமா நாம வேலைய ஆரம்பிப்போம்.
என்ன சரியா? 

பதில் சொல்லுடா!!

ஓகே சரி.


தொடரும்...

Friday, December 04, 2009

கதையாம் காதலாம்

முதல் நாள்:


"டேய் மச்சான் அங்க பார்டா அவ உண்ணையவே பார்க்குறா!"

"இல்லடா மச்சான் நா யாரையும் பாக்குறதா இல்ல, இவளுங்க சாவுகாசமே வேண்டாம்டா. பார்த்த வரைக்கும் போதும், பட்டதும் போதும்."

ஏண்டா மச்சான்? என்னாடா ஆச்சு? நீயா சொல்லுற! "


" உன்னைய பார்த்து அவ ஃபிரண்டு கிட்ட எதோ சொல்லுறாடா. டேய் ஒரே ஒரு தடவ அவள பாரேன்? "


"டேய் நிப்பாட்டுறயா இல்ல நான் கிளம்பட்டுமா? "

ஒருத்தன் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்காதே!


இரண்டாம் நாள்:


"டேய் மச்சான் நேத்து பாத்தோம்ல அவ இன்னைக்கும் நிக்குறாடா!"

"நெசமாவா? "


"நான் தான் சொன்னேன்ல அவ ஒன்னையத்தாண்டா பாக்குறான்னு. நீ தான் கேக்கவேயில்ல."


"இல்லடா மச்சான் பழச நா இன்னும் மறக்கல. அந்த வலி இன்னும் அப்புடியே இருக்கு. அத நினச்சுத்தான் நான் பாக்கலன்னு சொன்னேன்.
வேற ஒன்னும் இல்ல."


"மச்சான் எனக்கு என்னமோ இவ உனக்கு சூட் ஆவான்னு தோனுது."


சரிடா ஒரு வாரம் பாப்போம், அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம்.



ஏழாம் நாள்:


"என்னடா ஒரே சோகமா இருக்க"


"இல்லடா நாளு நாளா அவள பாக்கமுடியல"


"இந்த நாளு நாளா உண்ணையவும் பாக்கமுடியல,

போன் பண்ணுனா ஆஃப்னு சொல்லுச்சு எங்க போயிருந்த? "


"அத அப்புறம் சொல்லுறேன். இதுக்கெல்லாம் கவலபடாதடா,

அவ போனா போறா, உனக்குன்னு ஒருத்தி இந்த உலகத்துல

பிறக்காமலா போயிருப்பா!"



முதல் நாள்:

"அங்க பாருடி அவன் ஒண்ணையவே பார்த்துட்டு இருக்கான். "

"நான் பாக்கமாட்டேன்."

" அவன் எண்ணையதான் பாக்குறான்னு எப்புடி சொல்லுற"


இரண்டாம் நாள்:

"அவன் கூட இன்னொருத்தனும் நிக்குறான் இரண்டு பேறும் நம்மள பத்தித்தான் பேசிக்கிட்டு இருப்பானுங்க. இப்போ நாம அவனுங்கள பார்த்தோம்னா உடனே அவனுங்களுக்குள்ள பேசிக்குவானுங்க பாரு. \


"ஆமாண்டி பேசிக்குறானுங்க. "

"நான் தான் அப்பவே சொன்னேன்ல. "

"போய் பேசுவோமா. "

"ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி"



முப்பத்திரெண்டாம் நாள்:


"Hai Im sudha she is my friend vathini"

"Hai im suresh"

"எங்க உங்க பிரண்ட காணோம்"

"அவன் இப்போதான் கிளம்பிப்போனான்."

"போன் பண்ணுணா வந்துருவான்"


"வேண்டாம் உங்ககிட்டதான் பேசனும்"

"என்கிட்டயா? அவனுக்கு போன் பண்ணா வந்துடுவான்."

"அவருகிட்ட பேச என்னயிருக்கு, உங்க கிட்ட தானே பேசனும்."

"இல்ல அவனும் இருந்த நல்லயிருக்குமேன்னு நினச்சேன்"

"அவருட்ட அப்புறமா சொல்லிக்களாம்."

"இவ உங்கள லவ் பண்ணுறா, நீங்க என்ன சொல்லுறீங்க?"




இதுக்கு சுரேஷ் என்ன சொல்லியிருப்பாரு புரிஞ்சுக்க  ஏழாம் நாள மறுபடியும் படிங்க.(புரியாதவங்களுக்கு மட்டும்)






"செம்மொழிப் பைந்தமிழ் மன்றத்" தின் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை.


simpleblabla.blogspot.com


இந்த நீதிக் கதைலேர்ந்து கிடைக்குற நீதி என்னன்னு (இதையும் மதிச்சு நேரம் ஒதுக்கி படிச்சதுக்காக) தெரிஞ்சா நீங்களே விளங்கிக்குடுங்க.

Thursday, December 03, 2009

சில புகைப்படங்களும் ஒரு அணுகுண்டும்

Old Photographs from Indian History
புராதான படங்கள்:



The daughter of an Indian maharajah
Seated on a panther she shot, sometime during 1920s.

இப்புடி புகைப்படம் எடுப்பதற்க்காக எத்தனைய கொன்னாய்ங்களோ நாசம போறவனுங்க.




A British man gets a pedicure from an Indian servant .
இன்னமும் இந்த வேலையதான் பார்த்துக்கிட்டு இருக்கு நம்ம கவர்மெண்டு.


A rare view of the President's palace and the Parliament building in New Delhi.

உள்ள நடக்குறத பார்த்தா ஒன்னாங்கிளாஸ் புள்ளைங்களே பரவாயில்லன்னு தோனுது





The Grand Trunk Road , built by Sher Shah Suri,
Was the main trade route from Calcutta to Kabul

இப்புடிக்கா போன காபூலுக்கு போய்றலாமாம்.
சூப்பர் ரோடப்போய். இப்போ போனா சங்கு ஊதிடுவானுங்க.




A group of Dancing or nautch girls began performing
with their elaborate costumes and jewelry .

பணக்காரங்க போலிருக்கு போஸ் நல்லாதான் கொடுக்குறாக.

.

Women gather at a party in Mumbai ( Bombay ) in 1910 .

பார்ட்டி கொடுக்குறாங்களாம்.



An aerial view of Jama Masjid mosque in Delhi , built between 1650 and 1658.




The Imperial Airways 'Hanno' Hadley Page passenger airplane
carries the England to India air mail, stopping in Sharjah to refuel .

லண்டன்லேர்ந்து இந்தியாவுக்கு போறாக.



A group from Vaishnava, a sect founded by a Hindu mystic.
His followers are called Gosvami-maharajahs.

நம்ம ஊரு பாட்டுக்காரன்(ங்க)




அணுகுண்டு பார்ப்போம்!!!!



Just read what INDIA was as per LORD MACAULAY on his statement on

நம்ம மேக்காலே(இப்போஇவரு டிசைன் பண்ணுன கல்வி முறையதாம்யா
நாம் பின்பற்றுறோம்) இந்தியாவுக்கு வந்து நல்ல சுத்திபாத்துட்டு அவங்க அரசாங்கத்துக்கு அறிக்கைய அனுப்புறாரு.


2nd february 1835, in foll. snap..

2 ஆம் தேதி பிப்புரவரி மாசம் வருசம்  1835

Shocking .............Shocking [if truly authentic]

இவிங்க எல்லாம்(இந்தியா காரங்க) ரொம்ப நல்லவங்களாவும்,ரொம்ப ஒத்துமையாவும் இருக்கானுங்க.  இப்புடியே விட்டா இங்க காலந்தள்ளுறது ரொம்ப கஷ்டம்.  அதனால இவங்களோட முதுகு எலும்ப உடைக்கனும்.(பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்த சொல்லுறாரு)அதே மாதிரி ஆங்கிலமும் நம்முடைய கலாச்சாரமும், நம்ம ஊரும் அவங்களோட ரொம்ப புனிதமானது அப்புடின்னு நம்ப வைக்கோனும்.

இப்புடியெல்லாம் செஞ்சோம்னா நாம சொல்லுறமாதியெல்லாம் இவங்க வளைவாங்க.  நமக்கும் ரொம்ப ஈசியா இருக்கும்.




என்ன ஒரு வில்லத்தனம்.!!!!


கொலகாரப்பயலுக!!!



நம்ம பிரண்டு மின்னஞ்சல் அனுப்பி எல்லாத்துக்கும் பறப்புங்கன்னாரு.

பறப்பியாச்சு.