Tuesday, December 08, 2009

க்ரைம் கதை-பாகம் 2

டொர்.... டொர்..... கிர் கிர்
டொர்.... டொர்..... கிர் கிர்

டேய் மெதுவாடா சத்தம் அதிகமா வருது பாரு.

இதுக்கும் மேல மெதுவ அறுக்க முடியாதுடா.  இப்புடி அறுத்தாலே இன்னைக்குள்ள முடிக்க முடியுமான்னு தெரியல. 

பாத்துக்கிட்டே இருடா எவனாச்சும் வராணான்னு.

ஆனா ஒன்னுடா இத மட்டும் நாம செஞ்சு முடிச்சுட்டோம் பல பிரச்சனைங்க தீர்ந்திடும்ல.  நிம்மதியான தூக்கம், டென்சன் இல்ல.
எவனும் ஏன்னு கேட்கமுடியாது.

ஒரு கம்பிய எடுத்தா போதுமா இல்ல ரெண்டு கம்பிய தூக்கனுமா.
 நீ கொஞ்சம் பாத்து சொல்லு. 

ஒரு கம்பியே போதும்டா.  நானும் நீயும் என்ன இரண்டு அடி அகலமா இருக்கோம்.
 
வேலையப்பாருடா கேள்விகேட்டுகிட்டு,  நாளைக்கு எப்புடி ஆபிஸ்க்கு போகப்போறன்னே தெரியல.  இப்பவே மணி 2.30 ஆச்சு.

டேய் டேய் நிப்பாட்டுடா சைரன் சத்தம் கேக்குது.

 ஓடு ஓடு அந்த மரத்துக்குப் பின்னால ஓடு.  ஆ..............ஆ.....................................

டேய் என்னடா ஆச்சு,  உன் முட்டியில சிவப்பா என்னமே வருது.  என்னடா அது.

நக்கலு,  பேசுடா பேசு.  இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.  உனக்கு உதவி பண்ண வந்தேன் பாரு என்ன சொல்லனும்.


சைரன் சத்தம் கிட்டக்க கேக்குதுடா நல்லா மறஞ்சிக்கோ.  எவன் கண்ணுலயாச்சும் மாட்டிக்கிற போறோம். அப்புறம் கம்பிதான்.


உய்ய் உய்ய் உய்ய்
உய்ய் உய்ய் உய்ய்
உய்ய் ஊய்ய் உய்ய்

டேய் இது ஆம்புலன்ஸ் வண்டியோட சத்தம் மாதிரியே இருக்குல்ல.

ஆம்புலன்ஸ் வண்டி மாதிரியே இல்ல ஆம்புலன்ஸ் வண்டியேதான்.

அடச்ச.................. 

இத கேட்டு ஓடி கால்ல ரத்தம் வந்ததுதான் மிச்சம்.

சரி சரி சீக்கிறம் ஆரம்பி டைம் ஆகிக்கிட்டே இருக்கு.

மணி 3.00

டொர்.... டொர்..... கிர் கிர்


டொர்.... டொர்..... கிர் கிர்

மணி 3.30

டொர்.... டொர்..... கிர் கிர்


டொர்.... டொர்..... கிர் கிர்

மணி 3.55

போதும்டா நாளைக்கு கண்டினியு பண்ணலாம்.

என்னது நாளைக்கா இன்னும் ஒரு அறை மணி நேரந்தான், எல்லாம் முடிஞ்சுடும்.  வெய்ட் பண்ணு.


தொடரும்...

No comments:

Post a Comment