Thursday, November 25, 2010

இனிமையான இசையுடனான என் இரவு

இணையத்தில் யூடுயூப் தளத்தில் இசைக்கோர்வைகளைத்
தேடிக்கொண்டிருந்தேன்.  தெரியாத பெயர்களில் நிறைய வந்து விழுந்தது. ஒவ்வோன்றாக கேட்டுக்கொண்டேயிருந்தேன். அந்த வரிசையில் ஏஆர் ரஹ்மானின் பம்பாய் படத்தின் கரு(Theme) இசையினை நேரடியாக இசைக்கும் காணொளி இருந்தது.  படம் வெளியான பொழுதும், பின்பு தொலைக்காட்சியில் படத்தினைப் பார்த்த பொழுதும் கேட்டது.  அப்பொழுது தீம் இசையை விட பாடல்களின் மேலே ஈர்ப்பு அதிகமாக இருந்திருக்கக்கூடும்.  உண்மையச் சொல்லவேண்டும் என்றால், தீம் இசை என்றாலே என்ன வென்று தெரியாத அளவிற்கே என் இசையறிவு இருந்திருக்கும்.

அமைதியான டிங் டிங் என்ற மணியோசையுடன் ஆரம்பித்து,  பின்பு புல்லாங்குழல் இசையோடு அமைதியான அமைதியை உடல் முழுதும் பறவவிட்டு சட்டென மாறி வயலினுடன் ஆரம்பிக்கும் அந்த இசையை என்ன வென்று விவரிப்பது.  அற்புதமான அனுபவமாகவே நேற்றைய இரவு கழிந்தது.  மனம் முழுதும் அமைதியே குடிகொண்டு  யாருமற்ற அந்த தனிமையில்  உடல் முழுவதும் அதிர்வினை ஏற்படுத்திய இசையினை நீங்களும் கேளூங்கள்........

Saturday, November 20, 2010

உள்ளிருப்பவை....

முதலாய் தொடங்கி மிதவாய்
தனியாய்  திரிந்தாய் தனிந்தாய்
நினைவாய் பொதியாய் அலைந்தாய்
கனவாய் தினம் கனிவாய் ஒரு நாள்
மறு நாள் சரியாய் தவறாய்
அதனாய் அழிவாய் வருவாய் வெளியாய்
முடிவாய்....!!! முடிவாய்......!!!

Thursday, November 18, 2010

முதல் முதல்-3

ரொம்ப நாளாச்சுள்ள முதல் பாகம் இங்க கிளிக் பண்ணி படிக்கலாம் 

காதல் அருமையான உணர்வுன்னு ரொம்ப சுலபமா ஒரு வார்த்தைல சொல்லிட்டு போற விசயமில்ல.  அந்த உணர்வு உள்ள வந்த பின்னாலே வரக்கூடிய இல்லை கிடைக்கப்பெறக்கூடிய சந்தோசமும், வருத்தமும் அளவுக்கு அதிகமா இருக்கும்.  அது அவங்கவங்க திறமையப்பொருத்த விசயம்.   அதுக்கு நீங்க நல்லவனா இருந்தா மட்டும் போதாது ஒரு வேலையச்செய்ய எப்படி படிப்பும் திறமையும் முக்கியமோ அதவிட அதிகபடியான திறமைய இதுல காட்ட வேண்டியிருக்கும்.  இந்த விசயத்த பொருத்த வரைக்கும் திறமையிருந்தா படிப்பெல்லாம் ஒரு விசயமே இல்லங்க.


ஆனால் கேவுக்கு இத்துனை எளிதாக அமைந்ததில் அவனுக்கே ஆச்சரியம்தான். அத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவே அவன் பேரை சொல்லி அழைத்துவிட்டு வெட்கித் தலைகுனிந்திருந்தாள்.  பறக்கத்தொடங்கிய பட்டாம் பூச்சிகள் நண்பர்களின் கேளிப்பேச்சுகளில் மறைந்தன.  தலை குனிந்த வாரே அவள் இவனைக் கடந்து செல்ல,  இவனும் என்ன செய்வதென்று அறியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.


வீணான கற்பனைகளுக்குள் செல்வதை அவன் மனம் என்றுமே அனுமதித்ததில்லை. ஆனால் அன்றைய இரவு அவன் மனமும் மூளையும் தூக்கத்துக்கு விடைகொடுத்துவிட்டு  நான்கு மணி நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து குதூகலித்துக்கொண்டிருந்தது.  அவள் கடந்து சென்ற பின்  இவனும் பின்னால் செல்ல நண்பர்களுக்குக் கொண்டாட்டமாய் போனது.  பேருந்து நிலையத்தில் பெருங்கூட்டம் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தது.  பேருந்து உள் நுழையும் போதே பையைப் போட்டு இடத்தினை பிடிக்க அனைவரும் முண்டியடிக்க, இவன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.


உங்கள் இயல்புகளை உடைத்துபோடும் வல்லமை காதலுக்கு மட்டுமே உண்டு.  அதுவரையிலும், கூட்டம் குறைந்த பின்னே பேருந்தினுள் ஏறிக்கொண்டிருந்தவன் முதல் முறையாக கூட்டத்தில் அடித்து பிடித்து ஏறி இரண்டு சீட்டுகளைப் பிடித்தான்.  உட்கார வருபவர்களை எதிர்த்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டிருக்க அவள் அந்தப் பேருந்தில் ஏறவேயில்லை.  அவன் நண்பர்களும் ஏறவில்லை.(இந்த இடத்துல நம்ம கே வழிஞ்ச வழிசல் இருக்கே, காலத்துக்கும் மறக்காது)

மறுநாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் எழுந்தவன் குளித்து முடித்து, உடைகளை அயர்ன் செய்து, முகத்தில் பேர் அண்ட் லவ்லியின் புதுப் பொழிவுடன்  பேருந்து  நிறுத்தத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே காத்திருக்க, அரை மணி நேரத்தில் அவளும் வர,  பேருந்து கிளம்பும் வரைக் காத்திருந்து விட்டு கிளம்பிய பின் ஒற்றைக்கையில் கம்பியைப் பற்றி தொத்திக்கொண்டான். சட்டென யாரோ இவன் பெயர் சொல்லி அழைக்க திரும்பிப்பார்த்தான் அவன் அண்ணன் நின்று கொண்டிருந்தார். கேவுக்கு அடிவயிற்றை ஏதோ செய்தது.

எனக்குப் பிடித்த ரஜினி படங்கள்

சினிமா சம்பந்தமா எழுதி ரொம்ப நாளாச்சு.  சின்ன வயசுல ரஜினி ரசிகனா இருந்து ஒரு கட்டத்துல கமல் படங்களுக்கு ரசிகனா மாறியாச்சு. நான் முதல்ல பார்த்த அதாவது தியேட்டர்ல பாத்த ரஜினி படம் சிவாஜிதாங்க,  இத நீங்க நம்பித்தான் ஆகனும்.  இப்போ வரிசைக்கு போகலாம்.................


1.முள்ளும் மலரும்....

சின்ன வயசுல ரஜினியோட ஆக்சன் படங்களா பார்த்துட்டு இந்தப் படத்த பார்க்கும் போது செம போர் அடிச்சுது.  என் ரசனை மாறி ஹீரோவும் மாறினப்பிறகு இந்தப் படத்த பார்த்தேன்.  "காளி ரொம்ப கெட்டவன் சார்" இந்த டயலாக்கும், இந்தப்படத்தின் பாடல்களும் மறக்கமுடியாத ஒன்னு. 


2.ஜானி...

மேல சொன்ன அதே கேட்டகிரியிலதான் இந்தப் படமும்.  இந்தப் படத்த பொதிகைல தான் முதன் முதல்ல பார்த்தேன்.  கார் திருடுறதுல ஆரம்பிச்ச உடனே சரி இதுவும் வழக்கமான ரஜினி படமோன்னு தான் நினைச்சேன்.  ஆனா இயக்குனர் மகேந்திரன் ரசினிய ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடிப்ப ரசினிக்கிட்டேர்ந்து கொடுத்திருப்பார்.  ஆனா ரசினி கண்ணாடி போட்ட வேசத்துல ரகளை பண்ணியிருப்பார்.

3.தளபதி...

இந்தப் படத்த எத்தனை தடவ போட்டாலும் பார்ப்பேன்.  எங்கயுமே தொய்வே வராது.  ஆர்ப்பாட்டமோ,  ஸ்டைலோ இல்ல பன்ச் டயலாக்கோ எதுவுமே இல்லாத, ரஜினியோட இன்னோரு பெஸ்ட் இந்தப் படம்.


4.மன்னன்....

படம் ஆரம்பிச்சதுலேர்ந்து கடைசி வரைக்கும் ரஜினி ரஜினி ரஜினி. அவருக்கு சம்மான வேடம் விஜயசாந்திக்கு.  என்ன சொல்ல இந்தப் படத்துல வர்ற டயலாக் எல்லாம் செம ரகளை. ரஜினி ஆண்-பெண் ஏட்டிக்குப் போட்டியா நடிச்ச படங்கள் எல்லாமே  சூப்பராதான் இருக்கும். படையப்பா(6)வும் இந்த வகைலதான் சேரும். பட் மன்னன் தான் பெஸ்ட்.


5.மூன்று முடிச்சு....

கமலும் ரசினியும் சேர்ந்து நடிச்ச படம்.  இதும் ஆண்-பெண் எதிர் எதிர் என்ற கேட்டகிரியிலதான் சேருது.  கமல் இறந்து போன பின்னாடிதான் கதையே ஆரம்பிக்கும்.  ஸ்ரீதேவி ரஜினி காம்பினேசன்ல இதுவும் எனக்குப்பிடிச்ச படம்.

 ஒரு முக்கியமான விசயம் ஆக்சன் படங்களிலேயே த பெஸ்ட் அப்புடின்னு சொன்னா அது பாட்சா(7) மட்டும் தான்.  என்னா படங்க அது. இது எழுதும்போதே எனக்கு சிலிர்த்துப்போகுது.  எத்தனை தடவ பார்த்திருக்கேன் கணக்கே இல்லங்க.  இந்த மாதிரி ஒரு படம் மறுபடியும் வருமாங்குறது எனக்குத்தெரியல.  பட் என்ன சொல்ல சூப்பரோ சுப்பர் இததான் சொல்லமுடியும்.

தொடர் பதிவுக்கு அழைத்த தேவா அண்ணாவுக்கு நன்றிகள் .