Wednesday, October 06, 2010

தோன்றிக்கொண்டிருப்பவை

ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு யுகங்களாய் தொடர்ந்து
கொண்டிருக்கும் இப்பூகோளத்தின் நகர்தலில்
நில்லாமல் பெருகிக்கொண்டிருக்கும் நினைவுகளை
யாதோரு வலியுமில்லாமல் எதிர்வரும் முகங்களில்
திணிக்க எண்ணுகிறேன்.....

எதிரெதிரே வரும் முகங்களில்
மாறிமாறி நிகழும் மோதல்களில்
வீரியமற்ற என்னின் நினைவுகளும் மோதி
மோதித் திரும்புகின்றன புதிய நிறங்களுடன்.....

சில நேரங்களில் அதன் இயல்புத்தன்மைகள்
பஞ்சுப் பொதிகளின் தன்மையை ஒத்திருக்கின்றது
இலக்கில்லாமல் சிறகுகளின்றிப் பறக்கச் செய்யும்
அதனில் சிக்கிக்கொண்டு நான் இளகுவதை உணர்கிறேன்...

வீடு திரும்பலில் இருக்கும் இனிமையை தொலைத்துவிட்ட
தனிமையான இந்நாட்களில்
எங்கும் பறந்து நிறைந்து இறைந்து கிடக்கும்
பின்னிப்பிணைந்த அதன் தொடர்புகளில்
ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக தாவிக்கொண்டு
வேர் நோக்கிய அதனின் பயணங்களில்
தொலைந்து கொண்டேயிருக்கின்றன என்னின் தூங்கா இரவுகள்......

6 comments:

Chitra said...

வீடு திரும்பலில் இருக்கும் இனிமையை தொலைத்துவிட்ட
தனிமையான இந்நாட்களில்
எங்கும் பறந்து நிறைந்து இறைந்து கிடக்கும்
பின்னிப்பிணைந்த அதன் தொடர்புகளில்
ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக தாவிக்கொண்டு
வேர் நோக்கிய அதனின் பயணங்களில்
தொலைந்து கொண்டேயிருக்கின்றன என்னின் தூங்கா இரவுகள்..


...... well-expressed!

dheva said...

எப்போதும் எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு .... ஏன் இவன் எழுதுவது இல்லை என்று....! என் கண் முன்னாலேயே உன்னுடைய பணியின் சுமையை நான் பார்த்துக் கொண்டிருப்பதால் அது ஒரு ஆறுதலாய் இருக்குமெ அன்றி....உன் எழுத்துக்கள் எப்போதும் ஒரு தேடலின் உச்சத்திலும்....வெறுமையின் அடர்த்தியையும் எடுத்துக் காட்டுவதாகவே இருக்கும்.....!

இந்த கவிதையும் அப்படித்தான்...உணர்வுகளின் உன்னதாமான பிரதிபலிப்பு தம்பி....

சூப்பர்ப்..!

சௌந்தர் said...

முதல் முதல் என்று வந்தால் இங்கே கவிதை இருக்கிறது

செல்வா said...

//ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு யுகங்களாய் தொடர்ந்து
கொண்டிருக்கும் இப்பூகோளத்தின் நகர்தலில்
நில்லாமல் பெருகிக்கொண்டிருக்கும் நினைவுகளை//

தேவா அண்ணன் கூட சேராதீங்க அப்படின்னு சொன்னா யாரு கேக்குறீங்க .!!

செல்வா said...

////எதிரெதிரே வரும் முகங்களில்
மாறிமாறி நிகழும் மோதல்களில்
வீரியமற்ற என்னின் நினைவுகளும் மோதி
மோதித் திரும்புகின்றன புதிய நிறங்களுடன்.....///

இது கலக்கல் அண்ணா ..!

Jeyamaran said...

*/தொலைந்து கொண்டேயிருக்கின்றன என்னின் தூங்கா இரவுகள்....../*

Anna poi thoongunga......................
Migavum arumai............

Post a Comment