Sunday, October 24, 2010

வாழ்வே மாயம்

அது கல்லூரிக்காலம்.  புத்தகங்களை மிகத்தீவரமாக வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.  ஒரு நாள் திருச்சி தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் சு.ரா வின் ''என் உரைகள்'' மற்றும் சி.சு செல்லப்பாவின் ''வாடிவாசல்'' என இரண்டையும் தேடிக்கொண்டிருந்தேன்.  அப்பொழுதுதான் அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. "மரணம் மற்றும்" இதுதான் புத்தகத்தின் தலைப்பு.  கன்னடத்து சிறுகதைகளின் தொகுப்பு.  தமிழில் அதை நஞ்சுண்டான் மொழிப்பெயர்த்திருந்தார்.  மரணம் என்கின்ற வார்த்தையும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அர்த்தங்களும் என்று ,  மரணம் என்ற வார்த்தையில் எனக்கு பயமே உண்டானது.

 ஆனாலும் அந்தப் புத்தகத்தை வாங்கி விட்டேன்.  மரணத்தைப் பற்றியும் அதன் பின் நடக்கக்கூடியவைகளைப் பற்றியும் சொல்லிச்சென்றது.  இப்பொழுது அந்த கதைகள் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.  அதனால் ஏற்பட்ட பாதிப்பு இன்றும் தொடர்கின்றது.  ஒரு புரிதல் என்று கூட அதனைக்கூறுவேன்.  இன்ஸூரன்ஸ் துறையில் வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது உங்கள் மரணத்திற்கு பின் என்ற வார்த்தை உபயோகத்தை முடிந்த அளவிற்கு தவிர்க்க முயற்சி செய்வோம்.  இப்படி பொதுவாக நாம் அதனையும், அதனைப்பற்றி பேசுவதையும் தவிற்கவே விருப்புகின்றோம்.  நேற்று தேவா அவர்களின் ஒரு பதிவுத்தொடரை படிக்க நேர்ந்தது. வாழ்வே மாயம் என்ற தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதப்பட்ட ஒரு தொடர்.  


ஒருவரின் மரணத்தில் தொடங்கி அந்த உடல் எரியூட்டப்படுவது வரையான தன் எண்ண ஓட்டங்களை மிக எதார்த்தமாக எழுதியிருந்தார்.  சிலருடைய பதிவுகளை நாம் படிக்கத்தொடங்கிய காலகட்டதிலிருந்தே தொடர்கிறோம் அதற்கு முன் அவர் எழுதியவைகளை கண்டுகொள்வதில்லை, அதற்கான நேரமும் கிடைப்பதில்லை.  நேற்று இந்த பதிவு வாழ்வே மாயம் என் கண்ணில் பட்டது.  அதை அனைவரிடமும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை தேவா அவர்களின் அனுமதியுடன் பகிர்கின்றேன். 



9 comments:

செல்வா said...

Iniya piranthanal vazhthukkal anna. Maranam patriya payam enakum athikamakave ullathu. Appuram dheva annavoda pathiva nalaiku systemla irunthu padichikiren. Ithu mobile la irunthu padichathu. Athan englishla comment.!

அஹ‌மது இர்ஷாத் said...

பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்...

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அந்த தொடரை நானும் படிக்கிறேன்!

சௌந்தர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

தேவா அண்ணனின் பதிவு பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


தேவா பதிவை பகிர்ந்த்துக்கு நன்றி.... படிக்கிறேன்

ஜீவன்பென்னி said...

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்.......

THOPPITHOPPI said...

உங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

be lated birthday wishes my friend ....
wish u happy birthday

rockzs....

www.rockzsrajesh.blogspot.com

Post a Comment