Sunday, May 15, 2011

மிச்சம் ஏதுமிருப்பின்

நிழல் தேடி அலைகின்றது
எதிர்வரும் வரைகோடுகளில்
எனக்கான எல்லைகள் குறிக்கப்படக்கூடும்..

மெதுவாகவே நகருகின்றன பொழுதுகள்..
நேற்றைய வெக்கையோடு
இன்றைய வெக்கையும் சேர்ந்துகொண்டது..

திசைமாறிவிட்ட காற்றைடைத்த பாலிதீன் பைகள்
எதை நோக்கி பறக்கின்றதோ!!!
எதன் இலக்குகலிளோ சிக்கிக்கொள்ளக்கூடும்...

சட்டை பொத்தான்களில் தன்னை மறைத்துக்கொள்ளப்பார்க்கின்றது..
உள்ளிருக்கும் அதனதன் ஆசைகளை...
குளியலரையில் கரைந்துவிடக்கூடும்..

மிச்சம் ஏதுமிருப்பின் பின்னால் வரட்டும்

2 comments:

நிரூபன் said...

மீதமாக இருக்கும் ஆசைகளிற்குரிய, வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை உங்களின் கவிதை சொல்லுகிறது சகோ.
குறியீட்டு மொழி வடிவம் அருமை.

ஜீவன்பென்னி said...

தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகா.. உங்கள் பதிவுகள் அனைத்து மண் மனத்தோடு இருக்கின்றது. தொடருங்கள்.

Post a Comment