Tuesday, June 29, 2010

போர்

இருள் சூழ்ந்துவிட்டது
ஆனால்
இது இரவும் அல்ல
மழைப்பெய்வதற்காகவும் அல்ல
வெப்பமும் குறைவதில்லை
வெக்கையும் குறைவதில்லை
உக்கிரத்தின் உச்சதினை
எட்டி
அடங்கிவிட்டது.
பின்னும்
எட்டி எட்டி உதைக்கின்றது
ஓட ஓட விரட்டுகின்றது
எத்திசை நோக்கிலும்
எங்கும் காணவில்லை
ஏதுமற்ற வெளியே தெரிகின்றது.
அடைந்தது யாதென்று
இந்த ஆறறிவிற்கு புரியவில்லை
விடியல் வரும் நாளும் தெரியவில்லை.

1 comment:

Riyas said...

//இருள் சூழ்ந்துவிட்டது
ஆனால்
இது இரவும் அல்ல
மழைப்பெய்வதற்காகவும் அல்ல//

அருமையாகவுள்ளது வரிகள்..

Post a Comment