Saturday, June 26, 2010

கண்ணீர்

அசைந்து கொண்டிருக்கும்
அனைத்திலிருந்தும்
அறிந்து கொள்ளலாம்
அதனதன் இருப்பை.
செயலற்றுகிடக்கும்
அற்றுப்போன ஆதரங்களை
ஆழத்தோண்டி புதைத்துவிட்டு
கசியும் கரிக்கும் நீர் துளிகளை
செயற்கையாய்
துடைக்கும் அந்த கைகளுக்கு
என்று தெரியுமோ
அது கண்ணீர் என்று.

2 comments:

Post a Comment