Friday, January 22, 2010

ஆயிரத்தில் 1ருவன்

முதல் பத்து நிமிடப் படத்தை பார்க்கலன்னாலும்,  எனக்கு எந்த குழப்பமும் வரல.  ஏன்னா நம்ம பதிவர்கள்தான் விமர்சனம்னு சொல்லி முழுசா கதைய பிரிச்சு மேஞ்சுட்டாங்களே. 

காதல்  காட்சிகளே இல்லாத ஒரு படம்.  குத்துப்பாட்டு, கானாப்பாட்டுங்குற பேர்ல காத ரணமாக்குற எந்தவிதமான் இம்சைகளும் இல்ல.

படத்துல நாயகியும் கிடையாது நாயகனும் கிடையாது. 

இடைவேளைக்கு முன்னாடி வரைக்கும் என் பக்கத்துல இருந்தவருக்கு சந்தேகமே வரல.  ஆனா இரண்டாவது பாதியில அவருக்கு வர்ற சந்தேகத்த அப்பப்போ கிளியர் பண்ணவேண்டியாத போச்சு.  இத ஏன் சொல்லுறேன்னா ரோம்ப போர் அடிச்சா குருவிய தினமும் பார்க்குற ஆளு அவரு.

இடைவேளைக்கு பிறகான கதையின் போக்கு தமிழுக்கு ரொம்ப புதுசா இருக்குமோன்னு தோனுது.  அப்புறம் நிறைய பேர் சொன்ன மாதிரி இரண்டாவது பாதில யாருக்கும் புரியாத தமிழ யாருமே பேசல.  ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கலாம் ஏன்னா அவங்க பேசுறது தமிழத்தான். 

பிரகாஷ் தன்னால எவ்வளவு சிறப்பா இசை அமைக்க முடியுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார். ஆனா பாடல்கள் படத்தோட ஒட்டலயோன்னு தோணுது.  முக்கியமா ஓ ஈசா பாடல்.

கலை மற்றும் ஒளிப்பதிவு  இரண்டு துறையைச் சேர்ந்தவங்களுக்கும் இயக்குனர் நிறைய வேலைய கொடுத்திருக்கார்.   

மற்றபடி படத்துல நடிச்சவங்க எல்லோருமே தங்களுடைய சிறப்பான பங்களிப்பத்தந்திருக்காங்க.

திரைக்கதைய இன்னும் சிறப்பா வடிவமைச்சிருக்கலாம்.  முதல் முறை பாக்குறப்போ சிலருக்கு படம் புரியாம போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.

முழுசா மசாலாவ கலக்காம கொஞ்சமா சேர்த்து தமிழுக்கு ஒரு புது திரைப்படத்த கொடுக்க செல்வா முயற்சி பண்ணியிருக்கார். 

அமீரகத்துல இன்னைக்குத்தான் வெளியாச்சு. பதிவர்களோட விமர்சனத்துல படிச்ச நிறைய காட்சிகளுக்கு கத்திரிய போட்டுட்டாங்க போல. ஊருக்கு வர்றப்போ டிவிடில ஒரு முறை பார்க்கனும்.




மொத்தத்துல ஆயிரத்தில் ஒருவன் தமிழுக்கு புதுசு.  ஆனா அந்த அனுபவம் முழுசா கிடைக்காம போறதுதான் பழசு.

3 comments:

துபாய் ராஜா said...

உலக சினிமா பார்த்து ஊரே கெட்டு கிடக்கும் போது இது போன்ற சில நடுநிலையான விமர்சனங்கள் தான் மனதிற்கு சிறு ஆறுதலை அளிக்கின்றன.

வினோத் கெளதம் said...

நடுநிலையான விமர்சனம்.

ஜீவன்பென்னி said...

வருகைக்கு நன்றி துபாய் ராஜா.

வருகைக்கு நன்றி வினோத்.

Post a Comment