Tuesday, November 10, 2009

துபை பஸ்ஸில் ஏறிய மானம்



இந்தியாவோட மானம் போன கதையும்  அத தடுப்பதற்கு நம்ம ஹீரோ செய்த காரியமும். இதுதான் மேட்டரு.  பிச்சகாசு 2 திர்ஹம்ஸ்க்காகன்னு சொல்ல முடியாது அதுவே ரொம்ப பெரிய விசயமா தெரிஞ்சதனாலதான் இத செஞ்சிருப்பாங்களோ தோனுது. 

சாயங்காலம் மணி 8 இருக்கும்.  இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு.  இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான்.  நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு.  டிரைவரு நமக்கு ரொம்ப டியரு.  ஓமான் காரரு.  ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...


ஒருவழியா டிக்கட்ட கொடுத்து முடிச்சுட்டு பஸ் கதவ
மூடிட்டு எதயோ தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு
 அப்போ அவரு கண்ணவுறுத்துற மாதிரு பச்ச கலர்ல
ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல.
அதே நெரத்துல அவரு கை வண்டியையும் ஸ்டார்ட் பண்ணுச்சு, ஆன் பண்ணுனத ஆஃப் பண்ணிட்டு அந்த 5 ருவாவ எடுத்துக்கிட்டு நம்மவூர்ல படத்துல SPECIAL லா விஜயகுமார் சிபரிசுல அப்பாய்ண்ட் பண்ணுன போலிஸ்காரராட்டம் கண்ணு சிவக்காம காத்து அடிக்காம இப்புடி எதுவுமெ இல்லாம ரொம்ப சாதாரணமா அப்புடியே அந்த நோட்டோடப் பக்கவாட்ல இரண்டு கையையும் புடிச்சுகிட்டு
 நடந்து வந்தாரு.


யாருக்கும் ஒன்னும் புரியல நான்கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு.
முதல்ல லைட்டா கேட்டறு,
கொஞம் குரல மாத்தி ஹர்டாவும் கேட்டுப்பாத்தாரு
நம்ம ஆளுங்கதான் எதையும் பிளான் பன்னி செய்ரவங்களாச்சே. 
ஒருத்தரும் உண்மைய ஒத்துக்கல.  ஒத்துக்கலனா இப்பவே இங்கயே இந்த நோட்ட கிளிச்சுடுவேன்னு இடிமாதிரி முழங்கி ரெடியானாரு அப்பொ STOP னு யாரோ கத்துனாங்க. யாரு நம்ம ஹீரோதான்.  நீயா அப்புடிங்கர மாதிரி அவருக்கு ஒரெ ஷாக்(மேஜர் சுந்தர்ராஜன் இருந்திருந்தார்னா,  இரண்டு திர்ஹம்ஸ்க்கு பதிலா ஒரு ரூபாவும், ஒரு திர்ஹம்ஸ்சும்னு அன்னைக்கு ஏமாத்துனானே ஒருத்தன்னு  இன்னைக்கு சொல்லுரதுக்கு நாகேஷ் இல்ல அத கேக்குறதுக்கு நம்ம மேஜர் சாரும் இல்ல) 
உடனே குஸ்குஸ்னு எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க.
நம்ம ஹீரோவுக்கு இதெல்லாம் காதுல விழல அவனுக்கு அந்த நோட்டும் இந்தியாவொட மானமும் தான் தெரிஞ்சது.

5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான்.  இத்தாங்க கத,  ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க.  அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த,  ஹீரோ இந்தியா வந்தப்போ திருட்டுப்போயிடுச்சுங்கறது வேற கதை.

4 comments:

Prathap Kumar S. said...

ஹஹஹஹஹஹ இதெல்லாம் வெளிய சொல்லாமா??? நல்லாருக்கு.

பத்தி பத்தியா எழுதுங்க..தொடர்ச்சியா எழுதுனா படிக்கிற சுவாரஸ்யம் போயிரும்...

கலையரசன் said...

நல்லவேளை நா அந்த 5 ரூபாயை வாங்கல..
வாங்கியிருந்தா, என் பர்ஸ் இல்ல கானாம போயிருக்கும்? அவவ்வ்்வ்வ்வ்வ்வ்!!

கலையரசன் said...

ஏன் ஃபாலோயர் விட்ஜெட் வைக்கலை?
அதையும் வச்சிடுங்க சமீர்...

ஜீவன்பென்னி said...

"
நாஞ்சில் பிரதாப்...

ஹஹஹஹஹஹ இதெல்லாம் வெளிய சொல்லாமா??? நல்லாருக்கு.

பத்தி பத்தியா எழுதுங்க..தொடர்ச்சியா எழுதுனா படிக்கிற சுவாரஸ்யம் போயிரும்..."

சொல்லலன்னா உண்மை என்னன்னு யாருக்குமே தெரியாமல்ல போயிரும். ஆலோசனைக்கு நன்றி.

"
கலையரசன்...

நல்லவேளை நா அந்த 5 ரூபாயை வாங்கல..
வாங்கியிருந்தா, என் பர்ஸ் இல்ல கானாம போயிருக்கும்? அவவ்வ்்வ்வ்வ்வ்வ்!!"

அந்த 5 ரூவாகூட இல்லாத பர்ஸ் காணாமபோனா கவலையில்ல.

Post a Comment