Wednesday, November 11, 2009

ஒரு கப் காபி கிடைக்குமா

இந்த பதிவ எழுதலாமா வேண்டாமான்னு ரொம்ப யொசிச்சேன். ஏன்னா பதிவுல எழுதப்போற மேட்டரு அப்புடி.  பொதுவா பாக்குறப்போ  சாதாரண மேட்டருதான்.  ஆனா எனக்கு ரொம்ப புதுசு.  இந்த விசயத்துல நான்(+1) கூட கிடையாது அப்புடின்னா(+0)ன்னு அர்த்தம்.  அனுபவம் இல்லாம ஒரு மேட்டர எழுதுனோம்னா அதுல காரம் கம்மியாதான் இருக்கும்.  உதாரணத்துக்கு ராமகிருஷ்னனோட துனையெழுத்துல இருந்த நெருக்கம் கதாவிலாசத்துல எனக்கு இல்ல. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.  எழுத்தாளர்ங்க எல்லாம் இந்தியாவ காசு இல்லாம சுத்தியிருக்கேன் சொல்லுறப்போ அது எப்புடின்னு நம்ம மூளை யோசிக்கும்.  அதுக்கு விடைய தெரிஞ்சுக்குறதிக்காக ஒரு சட்டை, முழுக்கால் பேண்டோட திருச்சிலேர்ந்து கிளம்பி தஞ்சாவூரு, திருவாரூரு, அப்புடியே அந்த பக்கம் இருக்குற எல்லா ஊருக்கும் இலக்கு இல்லாம சுத்தியிக்கேன். மேட்டருக்குள்ள போகாம எங்கயோ போய்ட்டிருக்கேன்.  இத அப்புறம பாப்போம். எந்த மேட்டர சொல்ல வந்தேனோ அந்த மேட்டருக்கு போவோம்.


கொஞசம் வருசத்துக்கு முன்னாடி சுஜாதா ஆ.விகடன்ல துபைய  பத்தி எழுதியிருந்தாரு. அதுதான் மேட்டருக்கு ஆரம்பப்புள்ளி, ஆமா இதுக்கு காரணம் சுஜாதா தான்.


 அதப்பத்தி தெரிஞ்சுக்குறதுக்காக அந்த இடத்துக்கு போறதுக்குண்டான வழிகள தேடிக்கிட்டே இருந்தேன்.   அதுக்குண்டான களப்பணியையும்  இங்க வந்தவுடனேயே ஆரம்பிச்சுட்டேன்.  எங்கையும் போகாம எதையுமே செய்யாம உக்கார்ந்த எடத்துலயே அதங்க ஆபீஸ்லயே என்னோட அசிஸ்டண்டு வழியா (நம்ம ஆளு அடிக்கடி அங்க போவாரு போல: உபயம் அவங்க மாமா அங்க மேனேஜரு) குறிப்புகள் கிடச்சிக்கிட்டு இருந்துச்சு.

ரொம்ப கூச்சமா இருந்துச்சு, உள்ளார போறப்ப 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்குங்குற' மாதிரி நம்ம மனசு . ஆயிரக்கணக்கான டெசிபல்ல,கலர் கலரான விளக்குகளின் வெளிச்சத்தில்
நம்ம கண்கள் இரண்டால் ஒடிக்கிட்டு இருந்துச்சு.  நம்ம பயகதான்னு மனசுல ஒரு தெம்பு.   அநியாயத்துக்கு மரியாதையும் அன்னியோன்யத்தையும் காட்டுனாய்ங்க.  கையோட கூப்பிட்டுகிட்டு போய் உட்காரவெச்சானுங்க.  நமக்கு எதுத்தாப்ல ஸ்டேஜ்.  கொஞ்ச நேரத்துல ஒரு அம்மனி என் கிட்ட வந்து என்ன சாப்புட்றீங்கன்னு கேட்டுச்சு.  நம்ம பாக்கெட்டுதான் காலியாச்சே, அப்போதைக்கு சமாலிக்குறதுக்காக பிரண்டுக்காக வெய்ட்டிங்னேன். அம்மனி அப்படியும் விடல, ஜுஸ் இருக்குன்னுச்சு (நிலைம தெரியாம).  சாரி மேடம்! வேண்டாம்னுட்டேன்.  ஒரு மாதிரி பார்த்துட்டு போயிடுச்சு. அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்க  ரொம்ப நேரம்லா தேவைப்படல, கொஞ்ச நேரத்துல எனக்கு பின்னாடி க்லாஸ் உடையுர சத்தம், ஒருத்தரோட சட்டைய புடிச்சு தர தரன்னு இழுத்துட்டுப்போய் வெளிய தள்ளுனாய்ங்க.  சாப்பிட்டுட்டு காசு தரலயாம். என்ன சாப்பிட்டாருன்னு எனக்கு தெரியாது.  இதெல்லாம் நம்ம அசிஸ்டண்டு சொல்லவேயில்லயே.  அப்பத்தாம் புரிஞ்சுது மாட்டிகிட்டோம்டான்னு. அக்காவேர போறப்பையும் வாறப்பையும் நம்மலயே பார்க்குற மாதிரி ஒரு ஃபீலிங்கு.  பாக்கெட்ட பார்த்தேன் 50 திர்ஹம்ஸ்,   படிச்சமா அதோட தூக்கி தூர எரிஞ்சமான்னு இல்லாம  இதெல்லாம் உனக்கு தேவையான்னு அது என்ன பார்த்து கேக்குது.  அந்த ஆள இழுத்துட்டு போனவைங்க எல்லாம் தமிழ் சினிமால வற்ர வில்லனோட அடியாளுங்க மாதிரி வாட்ட சாட்டமா இருந்தானுங்க.

அப்போதான்  தைரியமா அத கேட்டுறுவோம்னு முடிவு செஞ்சு.  அம்மனிய கூப்டேன்,  பக்கத்துல வந்துச்சு 

""ஒரு கப் காபி கிடைக்குமா"". 

6 comments:

கலையரசன் said...

சே! இதுக்கா இந்த பில்டப்பு?

ஜீவன்பென்னி said...

"கலையரசன்

சே! இதுக்கா இந்த பில்டப்பு?"

மேட்டர ஃபுல்லா சொல்லமுடியல. ஏன்னா மேட்டர் அப்புடி.

Barari said...

ini thambi engal aluvalakam pockettai patri visariththu vittu thaan coffee tharavendum pol irukkuthu.

ரவி said...

:)))

ரவி said...

my votes.

ஜீவன்பென்னி said...

"செந்தழல் ரவி கூறியது...
:)))

செந்தழல் ரவி கூறியது...

my votes "

முதல் முறையாக வந்து, ஓட்டும் போட்டதற்கு நன்றி. மீண்டும் வரனும்.

Post a Comment