Monday, July 05, 2010

கிறுக்கல்கள்

ஆழக்குழி தோண்டி
மண்ணிலே தாழி செய்து
அடங்கிவிட்ட பிண்டத்தினை
அடைத்துவிட்டு நகர்ந்த பின்னே
அரித்து போகும் பூவுடலும்
முடிவிலா ஆசைகளும்
அதனுடனே முடிந்து போனதோ.
விட்டுப் பிரிந்த
சொந்தங்களும் கேள்வி ஏதும் கேட்பதில்லை.
மறைந்துபோன
மனிதர்களும் வந்து ஏதும் சொல்வதில்லை.

மெய் என்பது உண்டென்றால்
விட்டுப்பிரிவதும் அதுவென்றால்
விடைக்காணா கேள்விகளும்
கடைக்கோடி நட்சத்திரங்களும்
உறைவிடம் தேடி அலைகின்றதோ!

(எதுக்கு எழுதினேன்னு எனக்கே தெரியல)

5 comments:

செல்வா said...

அருமைங்க...!!

//மெய் என்பது உண்டென்றால்
விட்டுப்பிரிவதும் அதுவென்றால்
விடைக்காணா கேள்விகளும்
கடைக்கோடி நட்சத்திரங்களும்
உறைவிடம் தேடி அலைகின்றதோ!///

தொடர்ந்து எழுதுங்கள் ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை சகோதரா..

தொடர்ந்து எழுதுங்கள்..

ஜீவன்பென்னி said...

@செல்வர்குமார் & வெறும்பய உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

School of Energy Sciences, MKU said...

ரொம்ப நல்லாயிருக்கு பாஸ். மெய்‍-ங்குறாங்க ஆனா அழிஞ்சு போயிடுதே? அப்போ அது பொய் தானே?

ஜீவன்பென்னி said...

ரொம்ப சரியான கேள்வி வில்சன் அண்ணே.

Post a Comment